Sunday, January 19, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -018

பாண்டவர்கள் அஸ்த்தினாபுதம் செல்லுதல்


191
பாங்காய் பரிசில்கள் பல்வித ஆடையென
ஆங்கவர்  கொண்டு அணிவகுத்து மங்கையுடன்
தீங்குடை  அத்தி திசைநோக்கி தம்நகர் 
நீங்கினார் தன்சொல்லில் நின்று.

192
நாச மனமறியா  நல்லோர்கள்  நம்பியே
நீசர்மனை நாடி நீள்வழி செல்கையில் 
வாசலுக்குச் சென்று வழிபார்த்து காத்திருக்கும் 
வேசற(வு) ஊட்டும்  விதி. 
( வேசறவு - துயரம் ) 

193
பாய்ந்திடும்  தேரினில்  பாரினைச் சுற்றியே
காய்த்திடும் வெய்யோன்  கரங்களைத் தாழ்த்தினான்
ஓய்வுக்கு நேரமது உற்றதால்  மாலையில் 
சாய்கிறான் பொற்பில் தணிந்து

194
மஞ்சள் கிரணங்கள் மானெழில் காட்டிட
பஞ்சவர் ஐவரும் பயணம் தொடர்கிறார்
செஞ்சுடர் காட்டிடும் செவ்விய வானத்தின்
பஞ்சவர்ண ஜாலங்கள் பார்த்து. 

பாண்டவர் அத்தினாபுரம் அடைதல்

கலைவாணி துதி

வேணும்  மொழியனைத்தும்  வேண்டும் வகையில்கலை 
வாணியருள்  நீயே  வழங்கு

195.

இரவும் பகலும் இனிதே கழிய
அரவக் கொடியொன் அரண்மனை சேர்ந்தார்
பரவியது சேதி பஞ்சவரைக் காணல்
வரமென வாழ்த்திடும் மாநகரின்  மக்கள் 
திரளென வந்தார் திரண்டு 


196.
அத்தினம் சேர்ந்தனர் ஆரியர் பாண்டவர்
தத்தி எழுந்தன தாங்கொனாக் கூட்டமும்
எத்திசை நோக்கினும் எங்கெங்கும் மாந்தராம்
அத்தனை மக்கள் அதுவரை  எங்கிருந்தார்
இத்தனைப் பேரும் இயம்பு


197
வந்தவர் நல்லிசை வாசித்து ஆடினர்
சிந்தை மகிழ்ந்திட சீராய்ப் பார்ப்பனர் 
மந்திர கீதங்கள் பாட மகிழ்ந்தனர் 
செந்திரு நாட்டினர் சேர்ந்து. 

திருதராட்டிரன் உள்ளிட்ட பெரியோர்களை வணங்கி மகிழ்தல் 

198
மன்னவன் மாளிகை வந்தங்கு சேர்ந்தனர்
பொன்னரங்கில் தந்தையைப் போற்றி வணங்கினர்
அன்னவனும்  ஆசிதர தாத்தனாம் வீட்டுமனின்
பொன்னடித் தாழ்ந்தார் பொலிந்து

199

குந்தியுடன் காந்தாரி கோவில் அடைந்தனர்
சுந்தரி பாஞ்சாலி சூழ வணங்கினர்
வந்தவர் யாவரையும் வாழ்த்தி மகிழ்ந்தனள்
அந்தகள்  ஆன  அவள்

200.
உற்றவர் தந்த உபசாரம் ஏற்றனர்
கொற்றவர்  ஐவரும் கோதிலா உள்ளமுடன்
மற்றுமவர் தங்கிடும் மாளிகை சேர்ந்தனர்
சுற்றம் உடன்வரச் சூழ்ந்து


பாண்டவர் மண்டபம் காண வருதல்

201
பாணர்கள் நல்லிசை  பாங்காய் எழுப்பிட
ஆணிப்பொன் பட்டாடை ஆங்கவர் பூண்டனர்
நாணமிலா நூற்றுவர்  நாயகனின்  மண்டபம்
காண   விரைந்தனர் காண் 

மண்டபத்தில் துரியன் உள்ளிட்ச பலர் சேர்ந்திருத்தல்

202
வீட்டுமன் சார்ந்து  விதுரனும் மன்னனும்
நாட்டுறை நல்லமைச்சர்  மற்றுபல நாட்டினர்
கேட்டினை ஊட்டும்  கெடுமதியான்  நண்பர்கள்
கூட்டமாய் கொண்ட கொலு  


203.

புன்தொழில்  செய்ய புவியில் இணையிலா
மன்னன் சகுனியுடன் மன்றில் பலதீயோர்
குன்றிய உள்ளத்தார் கூடிக் குலவிடும்
மன்றினைக்  கண்டார் மலைத்து. 


சகுனி சூதுக்கழைத்தல்

204

சொல்லுகிறான் மாமனும் சொற்திறம் கூட்டியே
வில்லிலும் வேலினாலும் விண்ணையே வென்றவரே
வல்லுறு சூதிலுன் வன்மையை கண்டிட
வெல்லும் மறவர்கள்  வேட்கை உடையவராய்
இல்லத்தை சேர்ந்தார் இசைந்து. 


தருமன் மறுத்தல்

205
தருமனும் தன்னிலை யாதென்(று) இயம்பினான்
பெருமையிதில் இல்லையறப்  பெற்றியும் இல்லை
வரும மனத்தாயெம்  வாழ்வை குலைக்க
வரும்செயல் வேண்டாம் விலக்கு 

( வருமம் - வன்மம்) 


சகுனி தூண்டுதல்

206

வஞ்சக மாமன்வாய் விட்டு  நகைத்தான்
அஞ்சல் அழகோ? உன்னிடம்பொன் இல்லையோ?
பஞ்சவரின் மூத்தவனே பாரோர்   இகழ்ந்திடும் 
கஞ்ச மனமோ? கவறினில் பந்தயமாய் 
கொஞ்சம் திரவியத்தைக் கொட்டு

207

நிச்சயம் நீவெல்வாய் வெற்றி நினக்கியல்பு
அச்சமும் வேண்டா அரசே அரங்கிலே 
கச்சையுடன் காய்களைக் காண்பீர்  தயங்காது  
மெச்சி வருவீர் விரைந்து 

பாஞ்சாலி சபதம் பெண்பாவில் -017

தருமனின் தீர்மானம்
--
178
தருமனும் தன்னிலை சற்று நினைந்து
வருவினை ஏதும் வழியில் நில்லா
கருமங்கள் வந்தால் கடனென்று ஏற்போம்
தருமமிது என்றுரைத் தான் 

179
தந்தைசொல்ல   சிற்றப்பன் தூதுவரத் தான்கண்டு 
சிந்தையில் சீற்றம் தவிர்த்திட்டான் - முந்தை
சிலைராமன் செய்கை சிறப்பதனைச் சொல்லி 
தலைமகனும்  ஏற்றான் தகைந்து. 

180
தம்பியாம் வீமனிடம் சொன்னான் தருமனும்
நம்பிநாம் செல்வதே நன்று, நம்முடன் 
தம்பியரும் தாரகையும் அத்தினம் செல்லவழி 
செம்மையாய் செய்வாய் சிறந்து. 

 வீமன் திகைத்துச் சொல்லுதல்

181
வீமன் விசயனிடம்  வியந்துரை சொல்லுகிறான்
மாமன் மருகனுடன் மர்மசதி செய்கிறான் 
தாமதம் இன்றிநாம் தம்படை கொண்டங்கு 
கோமகனைச் சாய்ப்போம் குலைத்து

182
நெடுநாள் பகையடா,  நெறியிலா  மாக்கள்
கெடுமதி கொண்டு நமக்கு கொடுமையைக்
கூட்டினார் நாமதற்குக்  கோடிட  நம்மையும் 
நாட்டினர் பழிப்பார் நகைத்து. 

183
யாரிடம் தந்தை அவிழ்க்கிறான் பொய்களை
போரிடச்  சென்று பகைதனைப் போக்குவோம்
பாரில் இவரொடு பாங்காய் வாழ்ந்திட
நேரிடும் வாழ்வோ நெருப்பு


தருமன் மறுத்துரைத்தல்

184
வீமன் உரைகேட்டு விம்மிடும் தம்பியர்
தாமதை ஆமென்று தம்முரைச் செப்பினர்
தாமரைக் கண்ணன் தருமன் மறுத்திட்டான்
தாமதம்  ஏதும்  தவிர்த்து

185
அன்புடை தம்பியர் அவ்வகை தன்னிடம் 
வன்புமொழி  பேசும் வகையினர் ஆனதை
மன்னனும் கண்டதும்  மாண்புடன் கூறினான் 
பித்தனல்ல நானிங்குப் பார்

186
 முன்பு நமக்கவர் மூட்டிய கேட்டினை
என்றும் மறந்திலேன் என்செய்ய இத்தனையும் 
முன்னின்று நம்மை முடுக்கும் வல்விதிதான்  
பின்நின்று செய்யும் பிழை

187
தந்தையவன்  சொன்னால் தருமம் பிறிதுண்டா
முந்தை இராமன் முனைந்த செயலதுவே
சிந்தை மயங்கி சீதரன் சொல்லைநாம் 
பிந்தி மறுத்தல் பிழை.

188
என்றுபல  நீதிகளை ஏந்தல் தருமனும்
சென்றவன் தாளதை சேர்ந்தனர் தம்பியர்
குன்றின் விளக்காய் அறவுரைக் கூறினாய்
என்றார் அவருன் இசைந்து


189.
துன்பம் எமக்கென்றோ தூயவனே யாமுரைத்தோம்
அன்பு மிகுந்திடவே அண்ணே உனையெதிர்த்தோம்
மன்னனே மன்னிப்பாய் மாண்பிலா  எங்களின் 
வன்புமொழி தன்னை மறந்து. 

190.
உன்னைப்போல் உலகத்தின் நீதிதனை யாரறிவார் 
உன்வழி கண்டேயாம் உய்ந்திடுவோம் - மன்னவா
இன்பதுன்பம் யாவும் இனியுந்தன் பாதையில்
முன்னவனே வருவோம் முனைந்து.

Wednesday, January 15, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -016

திருதராட்டிரன் சொன்னதை விதுரன்  உரைத்தல்

164

வேள்வி முடிந்து வெகுநாள் ஆனதால் 
தோள்வலி மிக்கோர் சொற்கள்தாம் நித்தமும் 
காதினில் கேட்குதாம், கண்டழை  நீயென்று
மேதினி  ஆள்கின்ற வேந்தனும்  சொல்லிட 
தூதென வந்தேன் தொடர்ந்து

165
இந்திரன்  மண்டபமும் இங்குண்டு காணென
சுந்தரமாய் கட்டி எழுப்பினர் -தந்திர
மாளிகை; கண்டோர் புலனை மயக்கிடும்
கேளிக்கைக் காடதாம் கேள்.

167.
தங்க மயமாக தானுயந்த  மண்டபத்தை  
மங்கையுடன்   உங்களைக் காண அழைக்கிறான்   
அங்குநல் நாள்குறித்து ஐவரும் வந்தங்கு
தங்கிடவாய்  அன்பில் தழைத்து. 

168
மன்னவன் சொற்கள்தாம்  மற்றும் சிலவுண்டு
மன்றிலே சூதுடன் மாமனும் உன்னிடம்
பந்தயம் கோரும் பயமுண்டு ஆமிதனைச் 
சிந்தையில் கொள்நீ சிறிது. 


169
மரத்த மனமுடை  மாமனின் செய்கையால் 
தரம்கெட்ட மைந்தனோ .தார்வேந்தைத்  தூண்ட
உரம்கெட்ட வேந்தனும் உன்னிடம்  அனுப்ப
தரங்கெட்டு வந்திட்டேன்  தாழ்ந்து.

170
பதுமை எனவானான் பஞ்சவரின் மூத்தோன்
விதுரனின் வார்த்தை விழுங்கி , இதுதகுமோ
என்றயிர்த்தான், சொல்மயங்கி  இன்னலுற்றான் சிந்தையில் 
நின்றிடா எண்ணத்தில் நின்று.

தருமன் பதிலுரைத்தல். 
171

சிந்தை நடுங்கித் தருமனும் கேட்கிறான்
"எந்தையோ இவ்வுரை  ஏத்தினான்? நல்லோர்முன் 
கந்தையென  ஆகிட காண்பதற்கோ  நம்புகழும் 
விந்தை உலகில்யாம்  வீழ்ந்து"

172
நன்று  எமக்கென்றும் நாடிலன் சின்னவன்
மன்றில் சூதுண்டு வாவென்(று) அழைப்பதால்
எந்தையே ஏற்கமனம் ஆவதில்லை  என்றயிர்த்தான் 
சிந்தையில்  ஐயமதை சேர்த்து

173
முந்திய நாட்களில் முற்றாய் எமைவெறுத்து
தந்திரம் செய்தெமை சாய்க்கப் பார்த்ததை
தந்தைநீ  அறிவாய்  தரமிலான் செய்கையும் 
தந்திடு நல்லுரை தான் 

விதுரன் பதிலுரைத்தல்

174
அருமறை யாவும் அறிந்தோர் தவிர்ப்பர்
வெருட்டி மயக்கினான் வேந்தனை  மைந்தன் 
தருமங்கள் யாவும் தானுரைத்தேன்  அங்கு
வருந்தி இதற்கு மறுத்து


175
கல்லும் இரங்கிக் கலங்கும் வகையிலே
சொற்களைச்  சொன்னானென்  சோதரன்  -சல்லிப்பயல் 
மல்லுக்கு நின்றங்கு  மன்னனைச் சொற்களால் 
புல்லனும் மாற்றினான் புகுந்து 

176
இன்னுமென்ன சொல்லுவது? என்னிடம் மன்னவன்
சொன்னதைச்  சொல்லி;அவர் சூழ்ச்சியும் தானுரைத்தேன்.
பின்னவர் நால்வரின்  பேசு மொழிகேட்டு
உன்நிலை நீயும் உரை. 

177

தருமம் அறிந்தவன் சான்றோன் நீயும்
கருமம் இதுவெனக் கண்டு -வருகிற 
வல்வினை சற்றே மனதுணர்ந்து நீய்ந்தன்
சொல்லுக சொல்லில் சிறந்து. 

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -015

துரியோதனன் வெகுண்டு விதுரனை ஏசுதல்

149 ( அ)

வயிறை யெமக்கும் மனதை  யவர்க்கும்,
துயரம் எமக்கும் சுகத்தை யவர்க்கும்
இயம்பும் மனதை  எளிதில் அறிவோம் 
மயங்கோமுன் மாயவுரை கண்டு.  

திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்


149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும் 
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ  நம்மையும் 
வென்று  நடக்கும்  விதிவழி நாம்செல்வோம்
என்றனன்  மன்னன் இயைந்து. 

150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று 
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி 
உந்தும் நிலையில் உலைந்து


விதுரன் இந்திரபிரஸ்தம் அடைதல்

151
போருக்கு அச்சாரம்  போடும் விதிநொந்து
தேருள் அமர்ந்து வருந்தியே தேம்பினன்
தாருடை வேந்தன் தருமன் நகர்நோக்கி
சாரும் பொழுதினில்   தான்

இந்திர்பிரஸ்தத்தின்  வளமைக் காணுதல்

152.


நால்வகைச்  சேனை நடக்கப் பெருவீதி
கால்கை முளைத்த கருங்குன்றம் போலானை,
சூல்கொள் மரங்கள் சூழ வளர்ந்தோங்கும்
சாலைகள் தானமைந்த நாடு

153
ஓதிடும் பாடங்கள் ஓடிசெவி உள்நுழையும்
சோதிக்க எண்ணி   தொடரப் பயிலரங்கில் 
மோதிடும் ஆயுதங்கள்  மொத்தமாய் போர்மன்றில் 
மோதிட யார்வருவார் முன் 

154

நீலமுடி கொண்டு நீள்வரையின்  மீதினில் 
கோலமுறு பன்மரங்கள் கோகிலம்போல்  கார்முகில்கள்
சாலம் பலகாட்டும் சந்திரனும் சாய்ந்துறங்க
ஞாலத்தைக் காத்திடும் நாரணனன் போலுயர்ந்து
சாலங்கள் காட்டும் தழைத்து 


155

கொண்ட(து) அனைத்தும்  குறைவின்றி கொடுத்திடும்
தண்ணெழில் கொஞ்சிடும் விண்நகரை  மிஞ்சிடும்
நீண்டு விரியும்  நியமங்கள் பேரழகாய்த் 
தீண்ட மகிழ்ந்தான் சிறிது. 

156

பாரத நாட்டினைப் பாரிகழ பல்வகைச்
சோரமுடைச் செய்கை சுயோதனன் சொல்கிறான்  
பாரதைத் தூதென்று  பாவியேன்  செய்கிறேன்
கோரவிதி தன்னில் குலைந்து


பஞ்சவர் மாளிகை பார்

157.
அந்தி மறைந்திடும் அந்நேரம்  மாளிகை 
முந்தி  அவன்கண் முன்னிட சந்திக்க
வந்த விதுரனைக் கண்ட  தருமனும் நல்லதாய் 
தந்தான் வரவேற்புத் தான் 

158

விதுரனை தானும்  எதிர்கொண்ட ஐவர்
சதுரங்கச் சேனையுடன் தான்முந்திச் சென்றார்
எதிர்கொண்டு வந்தோர்க்கு   ஏந்தல் விதுரன்
மதுர மொழிசொன்னான் மற்று 


159
தங்கப் பதுமையென தையலுடன்  ஐவரும் 
அங்கவன் தாளை  அடிபணிய அங்கம்
குளிர்ந்துநல் வாழ்த்துகள் கூறினான் அன்பினில்
துளிர்க்கும் கண்ணீர் துடைத்து. 


160
குந்தியைக் கண்டங்கு கோமகன் தாள்பணிந்து
வந்தனை செய்தான் வளைந்து 

விதுரன் தூதுரைத்தல்

161.
வாழ்த்தினன் அண்ணனின் வாழ்த்தை வழங்கினன்
ஏழ்மை மனத்துடன்  ஐவரை நோக்கினன்
தாழ்த்தினன் தன்தலை, தீதுடை தூதுரைக்க
வாய்த்த விதியை  மதித்து.


162

ஆழ்கடல் தன்னில் அமிழ்ந்திடும் ஓடம்போல்
ஆழ்ந்தனன் சிந்தையில் ஆவி கலங்கினன்
தேய்ந்தது நெற்றியும் தேய்த்த விரல்களால்
காய்ந்தனன்  உள்ளம்  கனன்று

163.
வருவது யாவும் வருந்திடப் போமோ?"
மருகும் மனதை மனத்தால் ஒதுக்கி
செருதரு செய்கையை செய்ய முனைந்தான்
தருமத்தின் முன்மகன் தான்.

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -014

விதுரனை தூதுக்கு அழைத்தல். 

142

மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்
இதுவரை நீதிசொன்ன  தன்நிலைக் கொன்று
முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்
விதுரனைத் தூதாய் விடுத்து.

143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான்  சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்


144

வஞ்சனை மாமனின் வஞ்சகமும்  உள்ளதென்று  
பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும் 
அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும் 
மிஞ்சிடா தென்று மிழற்று. 


( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் ) 

145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்
என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான் 


விதுரன் வேதனையால் சொல்லுதல்

146 
போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்
ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்
பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்
மூச்சிலும் உண்டே முரண்

147
எத்தகு வார்த்தை  எளிதில் இயம்பினாய் 
மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர் 
கற்றதை  காற்றில் கரைத்தனையோ முன்னவனே 
உற்றதை நீயும்  உரை 

148
வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே
கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா
பஞ்சவரைச்  சூதில் பகடையால் வென்றபின்னர்
எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -013

திருதராட்டிரன் சம்மதித்தல்.

136.

அதிசய மைந்தனும் வந்து அழிக்க  
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான் 
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே   மதித்து

137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில் 
சதிசெய்கை செய்யநான்  சம்மதித்தேன்  என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு 
விதியிது  என்றான் மலைந்து

மண்டபம் உருவாகுதல். 

138
-
மஞ்சனும் மாமனுடன்  மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில்  பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும்  கண்டு வியந்திட 
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும் 
மிஞ்சி உயர்ந்ததவ்  வீடு

139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட   திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள் 
கொண்டு சமைத்தார் கொலு 

140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல். 

141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும் 
அரவின் அழகுபோல் ஆம். 

Monday, January 13, 2025

பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -012

திருதராட்டிரன் சம்மதித்தல்.

136.

அதிசய மைந்தனும் வந்து அழிக்க 
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான்
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே   மதித்து

137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில்
சதிசெய்கை செய்யநான்  சம்மதித்தேன்  என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு
விதியிது  என்றான் மலைந்து

மண்டபம் உருவாகுதல்.

138
-
மஞ்சனும் மாமனுடன்  மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில்  பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும்  கண்டு வியந்திட
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும்
மிஞ்சி உயர்ந்ததவ்  வீடு

139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட   திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள்
கொண்டு சமைத்தார் கொலு

140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல்.

141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும்
அரவின் அழகுபோல் ஆம்.

விதுரனை தூதுக்கு அழைத்தல்.

142

மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்

இதுவரை நீதிசொன்ன  தன்நிலைக் கொன்று

முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்

விதுரனைத் தூதாய் விடுத்து.

143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான்  சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்

144

வஞ்சனை மாமனின் வஞ்சகமும்  உள்ளதென்று 

பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும்

அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும்

மிஞ்சிடா தென்று மிழற்று.



( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் )

145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்

என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான்

விதுரன் வேதனையால் சொல்லுதல்

146

போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்

ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்

பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்

மூச்சிலும் உண்டே முரண்

147

எத்தகு வார்த்தை  எளிதில் இயம்பினாய்

மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர்

கற்றதை  காற்றில் கரைத்தனையோ முன்னவனே
உற்றதை நீயும்  உரை


148

வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே

கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா

பஞ்சவரைச்  சூதில் பகடையால் வென்றபின்னர்

எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?


திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்

149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும்
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ  நம்மையும்
வென்று  நடக்கும்  விதிவழி நாம்செல்வோம்
என்றனன்  மன்னன் இயைந்து.

150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி
உந்தும் நிலையில் உலைந்து