திருதராட்டிரன் சம்மதித்தல்.
136.
அதிசய மைந்தனும் வந்து அழிக்க
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான்
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே மதித்து
137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில்
சதிசெய்கை செய்யநான் சம்மதித்தேன் என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு
விதியிது என்றான் மலைந்து
மண்டபம் உருவாகுதல்.
138
-
மஞ்சனும் மாமனுடன் மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில் பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும் கண்டு வியந்திட
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும்
மிஞ்சி உயர்ந்ததவ் வீடு
139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள்
கொண்டு சமைத்தார் கொலு
140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல்.
141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும்
அரவின் அழகுபோல் ஆம்.
No comments:
Post a Comment