துரியோதனன் பதிலுரை
125
மூடன் சுயோதனன் முன்னவன்சொல் கேளாது
பாடம் பலவுரைத்தான் -கோடாது
நின்றிடும் மன்னன் மனநிலை நீர்க்கவாய்
வென்றிடும் வார்த்தை விளைத்து
126
மோதிடவும் அஞ்சுகிறாய் மொத்தமாய் சாய்த்திட
சூதினிற்கும் அஞ்சுகிறாய் துன்பத்தை ஊட்டுகிறாய்
மாதிறம் மட்டும்தான் மாறாமல் ஏற்றிடுவேன்
வாதினி ஏனாம் விளம்பு
127
விதுரன் அறிவால் விளம்புகிறாய் உந்தன்
மதிகெட்டுப் போனதோ மன்னா இதுவரை
பாண்டவர்க்கே பாசம் பயந்தவன் உன்னிளையோன்
மாண்டிடினும் மாறான் மனம்
128
கானகத்தில் வாழுகின்ற காட்டுத் தபசியர்போல்
தானறிந்த பல்துதியுன் தம்பி பகர்கிறான்
மானமிலான் தன்மனதில் மாண்பிலான் சொல்கேட்டால்
வானகம் செல்வேன் மறைந்து.
129
வெல்லுதல் வேந்தர்க் கடமை பகையெதிர்த்து
செல்வது நம்முரிமை செற்றில் பகையழிக்க
நல்வழியோ தீவழியோ நாணாது ஏற்கவெனச்
சொல்வது முன்னோரின் சொல்.
130
பகைத்தவர் ஓங்கிட பாண்டவர் நம்மை
நகைத்திட வாழல் நலமோ குகைக்குள்
திகைத்து பயந்திடும் சீயம் சிறக்குமோ
பகையழித்தல் ஒன்றே பலன்.
131
பழையநிதி போதும் பகைவேண்டாம் என்றால்
விழைந்துநம் வாழ்வதனை வீணர்கள் கொள்வர்
இழைப்பர் கொடுமை இயலாதுநாம் காண்போம்
பிழைத்து இருக்கும் பிழைப்பு
132
போர்த்தொழில் வேண்டாது போவென்றால் வேறான
ஓர்த்தொழில் உண்டு உனக்க்தனை சொல்வேன்கேள்
பார்புகழ் மாமனின் பண்டைத் தொழிலுண்டு
சார்வோம் அதையும் சற்று
134
மோதுபோர் இன்றி முடிக்கலாம் இச்சைகளை
சூதுக்(கு) அழைத்திடு துன்பங்கள் ஏதுமின்றி
மாதுடை ஐவரையும் மாண்பிழக்கச் செய்திடுவோம்
ஏதுபிழை உண்டோ இயம்பு
135
ஓவியம் போலாய் உறைந்துநின்ற தந்தையிடம்
கூவிபல குன்றுதோள் கோமகனும் சொல்லிட்டான்
ஆவி இறுத்திடுவேன் ஐயா இதைமறுத்தால்
பாவியுன் பாதத்தில் பார்
No comments:
Post a Comment