Sunday, January 19, 2025
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -018
பாஞ்சாலி சபதம் பெண்பாவில் -017
Wednesday, January 15, 2025
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -016
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -015
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -014
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -013
Monday, January 13, 2025
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -012
திருதராட்டிரன் சம்மதித்தல்.
136.
அதிசய மைந்தனும் வந்து அழிக்க
சதியின் சகுனியால் சாயுமர(சு) என்றான்
மதியால் வருந்திறன் கண்ட விதுரன்
விதியினை அன்றே மதித்து
137
கதியிதென்று கண்கள் கலங்க மன்றில்
சதிசெய்கை செய்யநான் சம்மதித்தேன் என்றான்
மதிகலங்கி நிற்கும் மகனைக் கண்டு
விதியிது என்றான் மலைந்து
மண்டபம் உருவாகுதல்.
138
-
மஞ்சனும் மாமனுடன் மன்றம் விலகிட
பஞ்சவர் மாளிகையில் பார்த்தது போலவே
கஞ்ச மலரோனும் கண்டு வியந்திட
விஞ்சி எழட்டும் வினைஞரே என்றதும்
மிஞ்சி உயர்ந்ததவ் வீடு
139
மண்ணவர் கண்டு மயங்கிட மேலுறை
விண்ணவரும் கண்டு வியந்திட திண்ணமாய்
வண்ண நவமணிகள் வாணுயர் கோபுரங்கள்
கொண்டு சமைத்தார் கொலு
140
இந்திரன் கண்டதும் என்சபை என்பான்போல்
மந்திர மாளிகையை மண்ணில் எழுப்பினார்
வந்தவர் யாவரும் வாழ்த்தி வழங்கிடும்
சுந்தர மண்டபமாம் சொல்.
141
துறவியும் கண்டால் துறவைத் துறந்து
பிறவியும் இங்கே பிழைக்கலாம் என்பான்
இரவிலும் காண எழிலுடை மன்றும்
அரவின் அழகுபோல் ஆம்.
விதுரனை தூதுக்கு அழைத்தல்.
142
மதுவெனப் பேச்சில் மயங்கிய கோமான்
இதுவரை நீதிசொன்ன தன்நிலைக் கொன்று
முதுமையும் சேர முடிவில் நிலைத்தான்
விதுரனைத் தூதாய் விடுத்து.
143
இந்திர மாநகர்க்கு இன்றேநீ செல்லென்றான்
மந்திர மண்டபம் மங்கையுடன் கண்டிட
தந்தைநான் சொன்னதாய் தானங்கு சொல்லிடு
முந்தி வருவரவர் முன்
144
வஞ்சனை மாமனின் வஞ்சகமும் உள்ளதென்று
பஞ்சவர்க்கு நீயும் பகர்ந்திடு கொஞ்சமும்
அஞ்சுதல் வேண்டா அரும்பெரியோர் முன்னெதுவும்
மிஞ்சிடா தென்று மிழற்று.
( மிழற்றுதல் - மென் சொற்களில் உரைத்தல் )
145.
சென்று பலபரிசு சேர்த்திடு ஐவரிடம்
என்று பலகூறி இன்னமும் சொல்லுகிறான்
குன்றுதோள் மைந்தரை கொண்டாடி மகிழவென்று
தந்தை அழைத்ததாய் தான்
விதுரன் வேதனையால் சொல்லுதல்
146
போச்சுது நல்லறம் போச்சுது வேதமும்
ஆச்சரியம் அண்ணே அனைத்தையும் நீமறந்தாய்
பேச்சு பெரிதெனப் பேசும் சகுனியின்
மூச்சிலும் உண்டே முரண்
147
எத்தகு வார்த்தை எளிதில் இயம்பினாய்
மொத்தமும் மோசமாம் நம்குலத்தோர் நாணுவர்
கற்றதை காற்றில் கரைத்தனையோ முன்னவனே
உற்றதை நீயும் உரை
148
வஞ்சகன் வார்த்தையால் நெஞ்சமும் மாறிடாதே
கெஞ்சியுனைக் கேட்பேன் தயையருள வேண்டுமண்ணா
பஞ்சவரைச் சூதில் பகடையால் வென்றபின்னர்
எஞ்சுவரோ உம்மக்கள் இங்கு ?
திருதராட்டிரன் மனம் மாறாது தூது செல்ல பணித்தல்
149
என்று விதுரன் இயம்பிட முன்னோனும்
சென்று வருகதம்பி சிந்தையில் மாற்றமில்லை
அன்று விதித்ததை இன்று தடுப்பதோ
என்றும் அதுதான் எளிதாமோ நம்மையும்
வென்று நடக்கும் விதிவழி நாம்செல்வோம்
என்றனன் மன்னன் இயைந்து.
150.
முந்திப் பிறந்தோன் மொழியால் விதுரன்
சிந்தை நிலையிழந்தான் தீதுடை தூதேற்று
விந்தை இதுவென்றான் வீண்பழிக்கு அஞ்சிவிதி
உந்தும் நிலையில் உலைந்து
Sunday, January 12, 2025
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -011
Thursday, January 9, 2025
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் 010
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் 009
Tuesday, January 7, 2025
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -008
பாஞ்சாலி சபதம் -007
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -006
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -005
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -004
-------
43
கன்னங் கரியதுவாய் காட்சிக்(கு) இனியதுவாய்
வன்னத் திருநதியின் வாச மருங்கினில்
பொன்னில் இழைத்த புகழ்மாடச் சீரழகை
எங்கனம் சொல்வேன் இயம்பு
சபையில் திருதராட்டிரன், துரியோதனன், விதுரன், பீஷ்மர், சகுனி, கர்ணன் முதலானோர் இருத்தல்
-----
44
தந்தைசொல் கேளாத் தனயனுடன், தம்பியும்
தந்தைக்குத் தந்தையாம் வீட்டுமனும் சொற்திறத்
தந்திர மாமன் சகுனியொடு கர்ணனென
மன்னர் பலருடை மன்று.
துரியோதனன் பொறாமை
-+++
45
எண்ணிலாச் செல்வங்கள் ஏற்றமுடன் கொண்டவன்
கண்ணிலான் ஈன்றெடுத்த காவலன் தன்னிலை
எண்ணிலான் ஏழையென ஏங்கிய காரணத்தை
எண்ணி இயம்புவேன் இங்கு
46
தருமனின் வாழ்வுத் தரத்தினைக் கண்டான்
பொருமி மனதில் பொறாமை - உரக்கவே
துஞ்சிடும் போதில் சுகமெலாம் போகுமென்(று)
அஞ்சினன் வெஞ்சினன் ஆம்
சகுனியிடம் சொல்வது
47
காண்டகு வில்லுடை காண்டீபன் வாழ்ந்திருக்க
மாண்டகு வீமனின் மார்பதில் வீரமதைக்
காண்கையில் நானுமிங் காள்வ தரசாமோ
பாண்டவரங்(கு) ஆனார் பெரிது
48
வேந்தர்க்கு வேந்தனென வேள்வி முடித்திட்டான்
ஏந்திழையின் அண்ணனும் ஏனோ துணைநின்றான்
பாந்தள்வாய்த் தேரை பதைப்பினை நானடைந்தேன்
சிந்தைக்குள் தீயின் சிலிர்ப்பு.
49
ஆயிரம் மன்னர் அவன்தாள் பணிந்தங்கு
ஆயிரமாய் பொன்பொருள் அன்பென்று தானளித்தார்
ஆயிரம் தேள்விடத்தை அன்றே உணர்ந்திட்டேன்
நோயுற்றோன் கொண்ட நிலை.
50
மந்தையெனக் கால்நடைகள் மங்கா ஒளித்தங்கம்
எந்தையும் கொண்டதில்லை ஏனடா மாமனே
கந்தைக்கும் என்னிடத்தில் கையேந்தி நின்றவர்கள்
எந்தைக்கும் ஏற்றமுற்ற(து) ஏன்?
51
பழவினை என்பான் பாண்டவரில் மூத்தோன்
கிழவியெனப் பேசும் கிளியாய் - உழக்கில்
உலகமதைக் காணும் ஒருவனோ ஆள்வது
தலைவனாய் தாரணியைத் தான்.
52
தம்பியர் வல்லமையால் தாரணி ஆள்கின்றான்
உம்பரும் வந்து தொழுதல் உவப்பாமோ
இம்பரில் முன்நிலை யானறிவேன் சொன்னாலோ
வம்பில் முடியும் வழக்கு.
53.
தருமனவன் வேள்விசெய்தான் தம்பிவலி தன்னால்
பெருமைபல பெற்றான் நிலத்தில் மாமா
பொறுக்கலையென் உள்ளம் புவியோரும் ஒப்பார்
தருக்கமிலாச் செய்கை தனை
54
உலகப் பெருநிதியை ஓரிடத்தில் கண்டு
கலங்கும் மனதினனாய் காண்கிறாய் என்னை
துலங்கும் வழியறியேன் துன்பமும் என்னுள்
சலங்கையுடன் ஆடும் சதிர்.
55
மணிபல ஈந்தனர் மன்னர்கள் ஆங்கே
துணியில் பலவகை; துய்க்க - அணியணியாய்
முத்தும் பவழமும்அம் மூடனுக்கு தந்தனரே
புத்தி அவர்க்குண்டோ புகல் ?
56
குவியலாய் தங்கமும், குன்றாத வைரம்
தவிக்கிறேன் கண்டதால் தாளா தணலெழும்பி
மூச்சும் சிறிதடங்க மாமனே ஓயாவென்
பேச்சும் அடங்கியதே பின்
57
தலைவன் இவனென்று சாற்றினர் மன்றில்
கலைந்திடா கூட்டம் களிக்க - சிலையென
நின்றதுடல், வெந்துமனம் நீர்த்து; நிலையின்றி
நின்றேன் அவற்றை நினைந்து
58
பாரில் உயர்ந்தவர் பாண்டவர் என்றசொல்
பாரினில் யாரும் பகர்ந்திட - காரிருள்
சூழ்ந்ததென் எண்ணத்தில்; சுற்றம் மறந்திட்டேன்
பாழும் கவலையினால் பார்
59
ஏதுசெய்வேன் மாமனே என்னுயிர் போகுதே
ஊதுலைபோல் உள்ளமது வாடமனம் - வாதுசெய்து
என்னை வதைக்குதே என்று முகம்கருத்து
முன்னவன் நின்றான் முனிந்து.
60
வெஞ்சமர் வீரர்முன் எக்களித்த ஏந்திழையும்
நெஞ்சிலே ஊழி நெருப்பினைத் தூண்டினள்
துஞ்சவும் அஞ்சும் துயரினில் நெஞ்சமும்
பஞ்சவர் பத்தினியால் பார்
61
யாதே இழப்பினு(ம்) என்மாமனே எந்தனுக்கு
தீதேதான் நேரிடினும் தீதில்லை, - தீதவற்கு
வேண்டுகிறேன், பாண்டவர்தாம் வேருடன் வீழ்ந்திடத்
தூண்டு அரசைத் துளைத்து.
62
என்றிவை சொல்லியவன் ஏழையாய் காய்கின்றான்
கன்றிழந்த தாய்போல் கவலை மிகக்கொண்டான்
குன்றெனும் தோளும் குலைந்து தரைசேர்ந்தான்
வென்ற விதிக்குள் வீழ்ந்து.
பாஞ்சாலி சபதம் வெண்பாவில் -003
****
36. சிந்தனைக்கு எட்டா சிறப்பினைக் கொண்ட
இந்திர லோகம் இறக்கி அதன்மேல்
எழுப்பியதோ இந்த அரண்மனை என்று
செழுமையாய் நின்ற சிறப்பு.
37. மன்னர்க்கு மன்னராம் மாமன்னர் ஆகவென
திண்ணமுடன் ஐவரும் சீர்மிகும் -கண்ணன்
துணையுடன் காண்டீபம் சேர்ந்திடவே செய்த
இணையிலா யாகம் அது!
38. யாகம் எதிர்த்தோர் யாவரயும் போரிட்டு
தேகம் அழிந்திடத் தீர்த்தனர்; பாகம்
பிரித்தபின் பாண்டவர் பல்லுயரம் ஓங்க
சிரித்தனர் வெற்றிச் சிரிப்பு
துரியோதனன் மாளிகை காணல்:
******************************
39. மண்டபம் கண்டான் மாமனொடு அன்னேரம்
கண்டது வாவியென்று கால்வரை ஆடைதூக்கி
நாணம் இழந்து நடந்தான் உண்மையில்
வானவன் செய்த வழியது; மாயம்
உணரா தலைந்தான் உழன்று
40. ஆங்கோர் இடத்தினிலே ஆழியென நீரிருக்க
காண்கையில் மாயமென காணாது - தாங்காத
தண்ணீரில் கால்வைக்க தள்ளாடி வீழ்ந்தான்
கண்டவர் தான்நகைக்கக் காண்
41. நகைத்தோர் யாரென நோக்கினான் ஆங்கே
வகையாய் சிக்கினாள் வஞ்சி - பகைத்தான்
பஞ்சவர் பத்தினியை; உள்ளில் வளர்த்தான்
வஞ்சத்தை நெஞ்சில் வலிந்து
42. பஞ்சவர் கொண்ட பலவகைப் புகழதும்
நெஞ்சினைக் கொன்றிட , நஞ்சொத்தோன் -மஞ்சுசூழ்
பாண்டவர் நாட்டை பார்த்த சுயோதனன்
மாண்டவன் ஆனான் மனதளவில் காண்டவ
காடதும் நாடாகக் கண்டெரி உள்ளத்தான்
வீடதும் சேர்ந்தான் விரைந்து
****
பாஞ்சாலி சபதம் - வெண்பாவில் 001
கணபதி துதி :
1
கோட்டானை தன்முகத்தைக் கொண்டானே நின்னருளைப்
பாட்டாலே பாடி, பருகுவேன் நற்றமிழை!
கேட்காமல் கேள்வி நலமருளும் நாயகாவென்
வாக்கினில் நீவா வலிந்து
2
கொஞ்சுமொழி பேசிடும் பிள்ளை மழலைபோல்
பிஞ்சுமொழி பேசிப் பழகிடும் என்பிழையை
நெஞ்சில் நினையாதே, நானெழுதும் பாவிற்கு
கந்தனின் சோதர;நீ காப்பு
3
4
பாரதி தந்த;நல் பாஞ்சாலி சூளுரையை
பாரதிர வெண்பாவாய் பாடிநிற்பேன்- தீர
மனத்துடன் மாசின்றி மாண்பாய் முடிக்க
கணபதியே இந்நூற்கு காப்பு
கந்தனுக்கு வணக்கம் :
5
எந்தனைக் காக்கும் ஏரகச் செல்வமே
வந்தனை செய்கிறேன் வள்ளி மணவாளா
சிந்தனையில் எழுகின்ற சீர்மிக்க பாக்களுக்கு
கந்தனே நீயாவாய் காப்பு
சரஸ்வதி வணக்கம் :
6 -
கல்வியின் தாயே கலைவாணி வேண்டுகிறேன்
எல்லையிலா இன்னமுதாம் என்தமிழை - பிள்ளை
விளையாட்டாய் பாடுகிறேன், வித்தகியே ஞானக்
கலைமகளே; காத்தருள் செய்
7 -
வேதத் திருவுருவே வேதாந்த பொற்குவையே
பாதம் பணிந்து பரவசமாய் பாடுகிறேன்
ஓதுமென் பாக்களெல்லாம் ஓங்கி உயர்ந்திட
வாதின்றி வாழ்த்திட வா
8 - நாவினிக்கப் பாடி நயம்பட நல்கிடும்
பாவினை நானும் பயிற்றவல்லேன் - பூவிலுறை
நாயகியே பாவென்று நானெழுதும் யாவிற்கும்
தாயன்பாய் சொல்லெடுத்துத் தா..
9-
கல்வியின் நாயகியே; தாயே கலைவாணி;
சொல்லுள்நீ ஏறி சுடர்விடுவாய் - மெல்லியலாள்
கோபத் தழல்கொண்ட கூந்தலாள் பாஞ்சாலி
நாபற்றி பேசவந்தேன் நான்!
10-
12 -
பஞ்சவர் பத்தினியே பாஞ்சாலி பேருடையாய்
வெஞ்சமர்க்கு வித்திட்டாய், வீரர்கள் - செங்குருதி
நீக்கியத் தீச்சுடரே நின்புகழை பாடுமென்
வாக்குக்கு வலிமை வழங்கு
************************
பாரதிக்கு வணக்கம்:
14-
பாரதம் பெற்றநல் பாட்டுடை பாவலன்
பாரதி பாங்காய் படைத்து நமக்களித்த
பாரத பங்கை;வெண் பாவாய் பகிர்கிறேன்
பாரதிதன் பாதம் பணிந்து
பாஞ்சாலி சபதம் - வெண்பாவில் 002
*************
21 -
அத்தினபுரி என்றோர் அழகு நகரதுவாம்
மொத்த அழகும் முழுதுள்ளே - வைத்ததுவாம்
பித்தம் தருகின்ற பேரழகோ நம்முடைய
சித்தத்தில் நிற்கும் சிறப்பு !
அவனிபுகழ் மாளிகை; அத்தாணி மாடம் ;
பவனிவர நல்வீதி; பால்சொரியும் மாக்கள்;
தவத்தினில் சீலர்கள் ; தீரர் பலரென்றே;
அவயமாய் கொண்ட அரசு.
29-
ஆழ்ந்த அழகுடை ஆறவள் பேர்யமுனை
வாழ்மக்கள் யாவர்க்கும் வற்றாநல் - ஊழெனவே
வாழ்விக்கும் தன்மையினால் வள்ளலாய் ஆனாள்தன்
பாழ்நிகர்த்த வண்ணம் வளர்த்து
30 -
கொள்ளை அழகுக்கு; கோமானாய் பாண்டுவெனும்
வெள்ளை உடல்கொண்டான் வீற்றிருந்தான் - வல்லியதோர்
சாபத்தால் தன்னுடல் சாய்த்ததினால்; முன்னவன்தன்
தாபமதை தீர்த்தான் தணிந்து
31 -
மஞ்சத்தில் சேர்ந்தாலே மாண்டிடுவாய் என்றதோர்
நஞ்சொத்த சாபத்தால் நாயகன் உயிர்மாள
தஞ்சம் அடைகின்றார் தானவனின் ஐம்புதல்வர்
வஞ்சம் அறியாது வந்து
துரியன் செயல் :
32 -
தனக்கோர் தாயாதி தன்னெதிரே கண்டதும்
மனம்வெதும்பி மாயச் சதியால் - குணம்கொண்ட
பாண்டவரை மாய்த்திடவே பல்லரக்கு மாளிகைக்கு
வேண்டி அனுப்பினான் விரைந்து
33 -
சதியை தவிர்த்து சாகசம் செய்து
விதிவழி பாஞ்சாலன் வஞ்சியை சேர்ந்து;
மதியிழந்து மன்றில் மறுபடி சேர்ந்தார்
விதிவழியில் முன்னிருந்த வீடு
34-
உள்ளெரியும் நஞ்சாய் உருக்குலைக்கும் வஞ்சத்தை
உள்ளில் வளர்த்தான் உவகையுடன் - கள்ளத்
துரியன்தன் வஞ்சம் துலங்கிட; தாத்தன்
பிரித்தனன் நாட்டைப் பகிர்ந்து
35 -
கொடுத்த இடமும் கொடுவனம் ஆயினும்
எடுத்து முடித்தார் எழிலுடை நாடென
அடுத்துக் கெடுக்கும் அரவக் கொடியோனும்
கடுத்துக் கிடந்தான் கழுது.
****